இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே.
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே!
விழாக் கானுமே, வானமே!
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே………….
தினம் நனையும், முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்.
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்.
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்.
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…………
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள்
தொலைத்தனவோ, முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ.
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
இளைய நிலா பொழிகிறதே…
இதயம் வரை நனைகிறதே…………